உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, July 9, 2011

இந்தியாவின் வேகமனிதன்

இந்தியாவின் மொத்த (1,210,193,422 (1.21 billion) மக்களின் கனவு நாயகன் நரேன் கார்த்திகேயன் .இந்தியாவின் வேகமனிதன் என்று விரும்பபடுபவர் .



இந்திய பார்முலா1  ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தைஹிஸ்பானியா அணியும் ரெட்புல் ரெனால்ட் அணியும் ஒரு குழு அமைப்போடு செய்திருப்பது மிகவும் கவலை தருகிறது .

நமது பாரத பிரதமர் மன்மோகன் சிங்கால் "He is a true representative of India's young spirit and he has set an example for the entire motorsports fraternity of India to follow."வருணிக்கப்பட்ட நமது நரேன் கார்த்திகேயன் ஹிஸ்பானியா ரேசிங் டீமின்  (Hispania Racing  Team) பயிற்சி ஓட்டுனராக (Test driver)
தரவிறக்கம் செய்ய படுகிறார்.

இந்த வருடம் முழுவதும் ஹிஸ்பானியா அணியில் ஒப்பந்தம் செய்ய பட்டு இருந்தாலும் ஓட்டுனர் என்ற அந்தஸ்த்தை மாற்றிக்கொள்ளும் அதிகாரம் அணியின் தலைமைக்கு இருந்தாலும் இந்த முடிவுக்கு பின்னால் மிக பெரிய உள்நோக்கம் உள்ளது .


கடந்த ஆண்டு சாம்பியனும் ,இந்த ஆண்டில் முன்னணியில் உள்ள  ரெட்புல் ரெனால்டின் தலைமை .
அந்த அணியின் மார்க் வெப்பருக்கு வரும் காலத்தில் மாற்றாக ஒரு டிரைவர் தேவை .




Daniel Ricciardo

அதற்காக டோரோ ரோசோ (  Toro Rosso) அணியில் பயற்சி ஓட்டுனரான இருக்கும் ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கியர்டோ (Daniel Ricciardo) வை மிக பெரிய தொகையை ஹிஸ்பானிய அணிக்கு கொடுத்து டிரைவர் சீட்டில் அமர வைத்துவிட்டது .டேனியல் ரிக்கியர்டோ பார்முலா1 பந்தயத்திற்கு புதியவர் .

ஆனால் நரேன் கார்த்திகேயன் தரவிறக்கம் செய்யப்பட்டதற்கு பல உதவாத காரணங்களை ஹிஸ்பானியா அணி சொல்லிகொள்ளலாம் .நரேனின் வேகமும் ,உணர்வும் அவருடைய அணியின் லூசியோடு (Vitantonio Liuzzi) இணங்கி போகவில்லையாம் .என்னோவோ லூசி தொடர்ந்து முதலிடம் வந்தது போலவும் நரேன் கடைசியாகவே வருவது போலவும் சிலாகிக்க படுகிறது .ஆனால் புள்ளிவிவரங்கள் சொல்லுவது என்ன ?

Vitantonio Liuzzi


லூசி இந்தவருடம் இதுவரை ஹிஸ்பானியா அணியிலிருந்து 17 ஆம் இடம் அடைந்ததே அதிக பட்ச இடம் .கடந்த 2009 ஆம் வருடம் நமது போர்ஸ் இந்தியா அணியில் இருந்தபோது கலந்து கொண்டது மொத்தம் ஆறு போட்டிகள் அதில் 11 ஆம் இடமே அதிகபட்சம் .அதே அணியில் 2010 ஆம் ஆண்டில் கலந்து கொண்ட 19 போட்டிகளில் சவுத் கொரியாவில் 6 ஆம் இடமும் -19 போட்டிகளில்-மொத்த புள்ளி அடிப்படையில் 21 புள்ளிகள் மட்டுமே பெற்றார் .அதனால் அந்த வாதம் செல்லாது .




மற்றும் ஒரு முக்கியமான விஷயம் ஹிஸ்பானிய அணியின் ஓட்டுனர்களை வைத்து கொள்ளும் முறையும் மிக மோசமானது .கடந்த ஆண்டுதான் இந்த அணி பார்முலா போட்டியில் அடியெடுத்து வைத்தது .ஆனால்,டிரைவர்கள் பட்டியல் மிக நீண்டது .
1) கடந்த ஆண்டில்(2010) பதினெட்டு போட்டிகளில் மட்டுமே - புருனே சென்னா (Bruno Senna) பயன்படுத்தபட்டார் .
2) கடந்த ஆண்டில் நமது இந்திய வீரர் கருண் சந்தோக் பத்து போட்டிகள் மட்டுமே பயன்படுத்தபட்டார் .
3) அதே ஆண்டில் ஜப்பானிய வீரர் சகான் யமமொடோ ( sakon Yamamoto) ஏழு போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தபட்டார் .
4) அதே ஆண்டில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டியன் கிளைன்( Christian Klien) மூன்று போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தபட்டார்.
எனவே இந்த ஆண்டு இதுவே தொடக்கம் ......

நமது இந்திய நரேனின் ஆதரவாளர்கள் (sponser)
டாட்டா குழுமமும் மற்றும் பேஸ் பேட்டரியின் தன்னிலை என்ன என்பது தெரியவில்லை .

 
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில்  புத் இன்டர்நேஷனல் களத்தில் நடக்கவிருக்கும்  போட்டிகளில் எத்தனை இந்தியா முகத்தை பார்க்கலாம் என்று ஒவ்வொரு இந்திய பார்முலா ரசிகர்களின் ஒட்டுமொத கனவையும் தகர்த்து வீசிவிட்டார்கள் .

ஆசையை  வென்ற புத்தரின் பெயரில் உள்ள களத்தின் போட்டிகளில், இந்தியர் யாரும் இல்லை என்ற வேதனையை யார் வெல்லக்கூடும் ?



மீண்டும் வருவேன் ....

மீட்க்க வருவேன் .......

No comments: